அரசியல்
விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் சங்கீதா

தமிழ்நாட்டின் முதல்வர் சி.ஜோசப் விஜய் (C. Joseph Vijay) மீது விவாகரத்துக்காக வழக்குத் தொடர்ந்திருந்தார் அவருடைய மனைவி சங்கீதா, அந்த மனுவை தற்போது நீதிமன்றத்தில் வாபஸ் பெற்றுள்ளார். இதனால், அண்மைக் காலமாக பேசுபொருளாக இருந்த இந்த வழக்கு திடீரென முடிவுக்கு வந்துள்ளது.
சங்கீதா தாக்கல் செய்திருந்த இந்த வழக்கு குறித்து பல்வேறு தரப்புகளில் விவாதங்கள் எழுந்திருந்த நிலையில், அவர் மனுவை திரும்பப் பெற்றது முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. வழக்கை வாபஸ் பெறுவதற்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.
இந்நிலையில், இந்த முடிவு இரு தரப்பினருக்கும் இடையிலான தனிப்பட்ட புரிதலின் விளைவாக இருக்கலாம் என சட்ட வட்டாரங்கள் கருதுகின்றன. இதன் மூலம், இந்த விவகாரம் மேலும் நீளாமல் அமைதியாக முடிவடைந்துள்ளது.
கருத்துகள் (0)
ஏற்றுகிறது…

