ரூபாய் 31,500 கோடி குவித்த எல்.ஐ.சி |இரண்டாம் நிலை பங்கு விற்பனையில் மாபெரும் வெற்றி!
இரண்டாம் நிலை பங்கு விற்பனையை ரகசியமாக அதேநேரம் 4 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் உதவியுடன் நடத்தி முடித்திருக்கிறது. எப்படிச் சாத்தியமானது இது?

மத்திய அரசு, எல்ஐசி நிறுவனத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான ‘ஆஃபர் ஃபார் சேல்’ (OFS) பங்கு விற்பனையை அதீத ரகசியம், வேகம் மற்றும் துல்லியமான திட்டமிடலுடன் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. இந்திய பங்குச் சந்தை வரலாற்றிலேயே இதுவே மிகப்பெரிய ஓஎஃப்எஸ் விற்பனையாகும்.
அரசின் முக்கிய முதலீட்டு நடவடிக்கையாகக் கருதப்படும் எல்.ஐ.சி. நிறுவனத்தின் சமீபத்திய பங்கு விற்பனை, திட்டமிடல் மற்றும் செயல்பாட்டின் துல்லியத்தால் கவனம் ஈர்த்துள்ளது. இந்த செயல்முறையில் ஈடுபட்டிருந்த ஒரு வங்கியாளர், எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென டெல்லியில் உள்ள அரசு அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார். அங்கு சென்றபின் தான், அதே இரவே பங்கு விற்பனை தொடங்கப்படவுள்ளதாக அவருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வு, இந்த நடவடிக்கையின் ரகசியத்தன்மையையும் அவசரத்தையும் வெளிப்படுத்துகிறது.
மேலும், அரசுக்கு ஆலோசனை வழங்கிய நான்கு வங்கிகளும் எந்த வித சேவைக் கட்டணமும் வசூலிக்காமல் இலவசமாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் 2.5 சதவீத பங்குகளுடன் தொடங்கப்பட்ட விற்பனை, நிறுவன முதலீட்டாளர்களின் அபார வரவேற்பினால் 6.5 சதவீதமாக உயர்ந்தது. இந்த வெற்றிகரமான முயற்சியின் மூலம் மொத்தம் ரூ.31,552 கோடி நிதி திரட்டப்பட்டது.
இதன் விளைவாக, எல்.ஐ.சி. நிறுவனத்தின் பொதுப் பங்குதாரர் பங்கு விகிதம் 10 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், செபி நிர்ணயித்திருந்த 2027 மே மாத காலக்கெடுவை விட முன்கூட்டியே விதிமுறைகளை முழுமையாக பூர்த்தி செய்துள்ளது. இந்த நடவடிக்கை, அரசின் நிதி மேலாண்மை திறனை வெளிப்படுத்தும் முக்கிய உதாரணமாக பார்க்கப்படுகிறது.
கருத்துகள் (0)
ஏற்றுகிறது…